×

பெண் வீட்டு முன் சிறுநீர் கழித்த டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  டாக்டர் சுப்பையா சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள தன் வீட்டு அருகில்  வீட்டு முன்பு சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஆதம்பாக்கம் காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 19ம் தேதி மருத்துவர் சுப்பையா கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த  வழக்கில் ஜாமீன் கோரி மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த வழக்கில் 2 ஆண்டுகளாக எந்தவிதமான முன்னேற்றம் இல்லாதபோது சட்ட பிரிவுகளை மாற்றியமைத்து மீண்டும் வழக்கு பதிய என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார். பின்னர், மருத்துவர் சுப்பையாவிற்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Subbaiah , Bail for Dr Subbaiah, who urinated in front of the woman's house: High Court order
× RELATED புறநகர் மாவட்ட செயலராக இசக்கி...