×

காரைக்காலில் மதுக் கடைகள் திறப்பு குடிமகன்கள் உற்சாகம்

காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுப் பிரியர்கள் உற்சாகமடைந்தனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. காலை 9 மணிக்கே கடைகள் திறக்கப்படுவதை அறிந்த மது பிரியர்கள் அதற்கு முன்பாகவே கடைகளில் குவிந்தனர். முககவசம் அணிந்தும், சமூக இடைவெளி விட்டும், நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மது பானங்களை வாங்கிச் சென்றனர். காரைக்காலின் எல்லைப் பகுதிகளில் உள்ள கடைகளில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமாளவர்கள் மதுக்கடைகளில் குவிந்தனர்.தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில் காரைக்காலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் தமிழகப் பகுதிகளிலிருந்து திரண்டு வந்து மதுப் பிரியர்கள் மதுபானங்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். திருநள்ளாறு, திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் நீண்ட வரிசையில் மதுக்கடைகளில் கூட்டம் காணப்பட்டது.காமராஜர் சாலையில் உள்ள மதுக்கடை முன்பாக கூடிய இளைஞர்கள் கற்பூரம் ஏற்றி, கை தட்டி, தேங்காய் உடைத்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post காரைக்காலில் மதுக் கடைகள் திறப்பு குடிமகன்கள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Karaickal ,Karaical ,Karakkal ,Karaikal ,Corona ,Karaicol ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் நிறைய பிரச்னைகள் உள்ள...