×

ரேஷன் அரிசி கடத்தியபோது சாலையில் கவிழ்ந்த மினிலாரி-40 மூட்டைகள் பறிமுதல்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் அருகே, கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றபோது, சாலையில் மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியிலிருந்த 40 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.தேனி மாவட்டம், சின்னமனூரிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று கேரளாவுக்கு நேற்று சென்றது. உத்தமபாளையம் அருகே, அனுமந்தன்பட்டி மெயின்ரோட்டில், எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்ற மினிலாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த 40 மூட்டை ரேஷன் அரிசி சாலையில் சிதறியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு எஸ்ஐ ஜெயபாண்டி தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு டிரைவர் உட்பட யாரும் இல்லை. லாரி கவிழ்ந்ததில் 5 மூட்டைகளில் இருந்த ரேஷன் அரிசி வீணாகியது. லாரியுடன் மூட்டைகளை பறிமுதல் போலீசார், இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, இதனைக் கடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்….

The post ரேஷன் அரிசி கடத்தியபோது சாலையில் கவிழ்ந்த மினிலாரி-40 மூட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Utthampalayam ,Kerala ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால்...