×

இந்தோ-பசிபிக்கில் நேட்டோ விரிவாக்கம் அமெரிக்கா திட்டத்தால் கடும் விளைவு ஏற்படும்: சீனா எச்சரிக்கை

பீஜிங்: ‘இந்தோ - பசிபிக் பகுதியில் நேட்டோ அமைப்பை விரிவுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சியால், கற்பனை செய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தும்,’ என்று சீனா எச்சரித்துள்ளது. உக்ரைன் போருக்கு மத்தியில் சீனாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சரும் இந்தியாவுக்கான முன்னாள் தூதருமான லீ யுசெங்க் கூறுகையில், ‘‘சோவியத் யூனியன் சிதைந்த பிறகு, வார்சா உடன்படிக்கையுடன் சேர்த்து நேட்டோ அமைப்பும் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நேட்டோ வலுவடைந்து விரிந்து கொண்டே செல்கிறது. இந்த விரிவாக்க முயற்சியால்தான் உக்ரைனில் இப்போது போர் ஏற்பட்டுள்ளது. இது ஒரு எச்சரிக்கை தான். இதே போல் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் திட்டமும் அபாயகரமானது. இது தடுக்கப்படாவிட்டால் கற்பனை செய்ய முடியாத விளைவுகளைக் கொண்டு வரும். இறுதியில் ஆசிய-பசிபிக் பகுதியை படுகுழியில் தள்ளிவிடும்,’’ என்றார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை அடக்க அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் உத்தியின் அடிப்படையில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்த குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவில் நேட்டோவை உருவாக்கும் அமெரிக்காவின் முயற்சி என சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. தற்போது, குவாட் போன்ற அமைப்புகளால் உக்ரைன் போர் மாதிரியான பின்விளைவுகள் ஏற்படக் கூடும் என சீனா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : NATO ,Indo-Pacific ,US ,China , NATO expansion in Indo-Pacific to be severely affected by US plan: China warns
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...