சென்னை: நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி முன்னிலையில் உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் துணை தலைவர் பதவிக்கான வாக்குகளை எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பதிவான வாக்கை விட 5 வாக்கு கூடுதலாக இருந்ததாக கூறி ஜசரி கணேஷ் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது. பேச்சு வார்த்தைக்குப் பின் துணை தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விஷால் அணி முன்னிலையில் உள்ளது.
பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் முன்னிலையில் உள்ளனர். துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ், பூச்சிமுருகன் ஆகியோரும் முன்னிலை பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 29 பதவிகளில் பெரும்பாலான பதவிகளுக்கு விஷால் அணியினர் முன்னிலை பெற்ற நிலையில் பாக்யராஜ் அணி வெளிநடப்பு செய்தது. பதிவான வாக்குகளை விட அதிக வாக்குச் சீட்டுகள் இருந்ததாக கூறி பாக்யராஜ் அணியினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பாக்யராஜ்; வெற்றி, தோல்வி பற்றி கவலை இல்லை. பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் இருக்கின்றன. கூடுதல் வாக்குகள் பதிவாகியிருக்கும் நிலையிலும், வாக்கு எண்ணிக்கையை நடத்துகிறார்கள் என கூறினார்.