×

திருமயம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியால் 4 மாடுகள் பரிதாப உயிரிழப்பு

திருமயம்: திருமயம் அருகே வயலில் அறுந்து கிடந்த மின்சாரம் தாக்கி நான்கு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள ஊனையூர் கிராமத்தில் சின்னக்கருப்பன் என்பவருக்கு சொந்தமான வயலில் அப்பகுதியை சேர்ந்த வெண்ணிலா, மாணிக்கம், கென்னடி, வடிவேல் ஆகியோருக்கு சொந்தமான மாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது வயல் பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராமல் மிதித்த 4 மாடுகள் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாட்டின் உரிமையாளர்கள் திருமயம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் பிரவினா மேரி, திருமயம் மின்சார வாரிய பணியாளர்கள் இறந்த மாடுகளை பார்வையிட்டு, மாடுகளின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து சென்றனர். மேலும் சம்பந்தப்பட்டவர்கள், தங்களுக்கு சொந்தமான வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் அச்சத்துடன் இருப்பதாகவும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வாரியத்தில் சரி செய்ய மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

எனவே அதிகாரிகள் ஊனையூர் பகுதிகளில் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை உடனடியாக சீரமைக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

Tags : Thirumayam , 4 cows die due to power outage near Thirumayam
× RELATED பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்...