×

டாப்சிலிப்பில் யானை மோதல் காயங்களுடன் பெண் காட்டு யானை உயிரிழப்பு

ஆனைமலை: ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகளியாறு வனப்பகுதியில், நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடல் மெலிந்த நிலையில் பெண் யானை ஒன்று நின்றதை கண்டு அதனை கண்காணித்து வந்தனர். பல மணி நேரமாக அங்கிருந்து செல்ல முடியாமல் தவித்த யானை குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது. ஆனால் யானை திடீரென மயங்கி விழுந்தது.
பின்னர் யானையை அருகில் சென்று பார்த்தபோது, ஆண் யானையுடன் ஏற்பட்ட சண்டையில், ஆண் யானை தந்தத்தால், பல இடங்களில் குத்திய காயங்கள் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து உயிரிழந்த யானைக்கு நேற்று வனத்துறை மருத்துவக் குழு மூலம் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் இதேபோல, கடந்த மார்ச் 3ம் தேதி காலில் காயங்களுடன் இருந்த 5 வயது பெண் காட்டு யானை வனத்துறை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Topslip , Elephant clash in Topslip Female wild elephant dies with injuries
× RELATED டாப்சிலிப்பில் உலக யானைகள் தின கொண்டாட்டம்