சென்னை: முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகளுக்கு ரூ.65.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (டான்சிகோ) மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு ஏற்ற விலையைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும் எனவும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.