சென்னை: திண்டிவனம், தேனி, மணப்பாறையில் பிரமாண்ட உணவுப்பூங்கா அமைக்கப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். இதற்காக ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. உள்ளூர் பயிர் வகைகளை பிரபலப்படுத்த மாவட்டந்தோறும் கண்காட்சி நடத்தப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறார். மயிலாடுதுறையில் இயங்காமல் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.