×

திருப்போரூர் பேரூராட்சி அலுவலகத்தில் கலைஞருக்கு வெண்கல சிலை: முதல் கூட்டத்தில் தீர்மானம்

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு முதல் மன்ற கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் மு.தேவராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இரா.பரசுராமன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் குணசேகரன் வரவேற்றார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருப்போரூர் பேரூராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் மார்பளவு வெண்கல சிலை அமைப்பது, பேரூராட்சியின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு, அனைத்து பூங்காக்களிலும் மேம்பாடு பணிகள், பேரூராட்சிக்கு சொந்தமான 17.23 ஏக்கர் நிலம் தவறுதலாக வருவாய்த் துறை பதிவேட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என இருப்பதை, கலெக்டரின் அனுமதியோடு மீட்டு அங்கு நீதிமன்றம் மற்றும் அரசுத்துறை கட்டிடங்களை கட்டுவது, 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு பாதாள சாக்கடை பணிகளில் சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Thiruporur Municipal Office , Bronze statue to the artist at the Thiruporur Municipal Office: Resolution at the first meeting
× RELATED திருப்போரூர் பேரூராட்சி அலுவலகத்தில்...