×

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000... தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல், நான் முதல்வன் திட்டம் : தமிழக பட்ஜெட்டின் அசத்தல் அறிவிப்புகள்!!

சென்னை: தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2வது காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்தியது பின்வருமாறு...

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது திமுக அரசு பொறுப்பேற்றது. கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தியதுடன் தேர்தல் வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றியது.

இக்கட்டான சூழலில் ஆட்சி பொறுப்பேற்றாலும், தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம். கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றன.கொரோனா பெருந்தொற்றின் 2வது மற்றும் 3வது அலை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா காலத்தில் நிதிச்சுமை அதிகமாக இருந்தபோதும் நிதி நிர்வாகத்தால் திறம்பட சமாளித்தோம்.

தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தலாக இருந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.தீர்க்கமான நடவடிக்கையால் அரசின் வருவாய் பற்றாக்குறை, 4.16%லிருந்து, 3.08%ஆக குறைய உள்ளது. திராவிட இயக்கம் சமூகநீதிக்கான போராட்டத்தில் வெற்றி பெற்றாலும், அது இன்னும் முழுமையாக முடியவில்லை.

*நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி முதல்வரின் செயல்பாட்டிற்கான அங்கீகாரம்.முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. மாநில அரசின் உரிமைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்.

*சமூகத்தின் அனைத்து பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும்  நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. சமூக நல திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.அனைத்து தளங்களிலும் சமூக நீதியை நிலை நாட்டுவதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்.

*தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டில் ரூ.7,000 கோடிக்கும் மேல் குறைகிறது. 2014 முதல் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வந்தது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக வருவாய் பற்றாக்குறை குறைகிறது.

*தாமிரபரணி படுகையில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் 3,200 ஆண்டுகள் பழமையானதாகும்.
தாமிரபரணி ஆற்றுப் படுகை தொல்பொருட்கள் மூலம், தமிழர் தம் வரலாறு மீண்டும் உறுதியாகியுள்ளது.

*உக்ரைன்-ரஷ்யா போரால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் பாதிப்பு ஏற்படக் கூடும். முதல்வரின் முகவரி என்ற புதிய துறையின் மூலம் 10.01 லட்சம் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.

*ஜிஎஸ்டி வரி நடைமுறை மூலம், மாநில அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.ஒன்றிய அரசின் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படும். ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் முதல்வர் கேட்டுள்ளார்.

*தமிழ் மொழியின் தொன்மையையும், செம்மையையும் போற்றிட, பிற மொழிகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் வேர் சொற்களை முன்னிலைப்படுத்தி, தமிழ் மொழி வளத்தின் புகழ்பரப்ப மொழி வல்லுநர்கள் குழு அமைக்கப்படும்.அகரமுதலி திட்டத்தின் கீழ் தமிழ் மொழியின் வேர்சொற்களை கண்டறியும் ஆய்வு பணி நடைபெறும்.
தாய்மொழி கல்வியே சிறந்த கல்விமுறை என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

*அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும்.தனியார் பள்ளிகளில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 10 வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.10 கோடியில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்கப்படும்

*தமிழ் மற்றும் இந்தோ - ஐரோப்பிய மொழிகள் தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்படும். தமிழ் மொழி குறித்த ஆய்வுக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும். தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ. 7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

*அரசு நிலங்களை பராமரிக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
பேரிடர் மேலாண்மைத்துறை ரூ.7,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*சமூக ஊடகங்களில் குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளின் விளைவாக அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும்.

*காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
*வானிலையை நவீன நுட்பத்துடன் துல்லியமாக கணிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
*சுய உதவிக்குழுக்களுக்கும், விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடு
*நீர்வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, ரூ.3,384 கோடி நிதி ஒதுக்கீடு
*சென்னை அருகே தாவரவியல் பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும்
*சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்
*கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
*தமிழ்வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு.
*சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,816 கோடி ஒதுக்கீடு.
*அணைகள் புனரமைப்பு பணிகளுக்கு ரூ.1,064 கோடி ஒதுக்கீடு.
*இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
*முன்மாதிரி பள்ளிகள் தொடங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு
*புதிய நூலகங்கள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு.
*இலக்கிய திருவிழாக்கள் நடத்த ரூ.5.6 கோடி ஒதுக்கீடு.
*சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.849.20 கோடி நிதி ஒதுக்கீடு.
*கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு
*டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மகப்பேறு திட்டத்திற்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*பெரியாரின் சிந்தனைகள், 21 இந்திய மொழிகளில் புத்தகமாக வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு
*தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1949 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
*கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு,
*சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
        
*நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு. நான் முதல்வன் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 5 லட்சம் மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

*புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்.புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகங்கள் அமைக்கப்படும்

*தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

*இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

*அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ. 1000 வழங்கப்படும்.

*ரூ. 5.6 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும், சென்னையை போல புத்தக கண்காட்சி நடைபெறும். தமிழர்களின் மரபை கொண்டாடக் கூடிய வகையில் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும். புதிதாக பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ₹36 கோடி மதிப்பீட்டில் மத்திய நூலகங்கள் அமைக்கப்படும்.

*வட சென்னையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாடு திட்டம் உருவாக்கப்படும்.

*புதிய திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும். பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்புகள், கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

*உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியுள்ள தமிழக மாணவர்களின் கல்விக்காக அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்.

*காஞ்சிபுரத்தில் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, உயர்தர மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்.

*செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.25 கோடியில் சமூக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். விளிம்பு நிலையில் உள்ள பழங்குடியினருக்கு(ST), 1000 புதிய வீடுகள், ரூ.50 கோடியில் கட்டித்தரப்படும்.


Tags : Tamil Nadu ,Tamil , Finance Minister, Palanivel Thiagarajan, Tamil Nadu Budget
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...