சென்னை: தமிழ்நாடு, மின்பகிர்மான கழகத்திற்கு கொடுத்த மானியம், அகவிலைப்படி உயர்வின் தாக்கம் பட்ஜெட்டில் இருக்கும் எனவும், வரும் நிதியாண்டில் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை இருக்கும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார். தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.82.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.