×

சீர்காழி அருகே பழையாறில் டீசல் விலை உயர்வை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பழையாறில் துறைமுகத்தின் மீன் வளர்ச்சி கழக விற்பனை நிலையத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.15 உயர்த்தியதற்கு கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைப்படகு, பைபர் படகு, நாட்டுப்படகு என சுமார் 1000 படகுகளை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் விற்பனை விலையை விட ரூ.27 கூடுதல் விலைக்கு டீசல் விற்கப்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : Palaiyar ,Sirkazhi , Drainage, diesel price hike, key boat fishermen, strike
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!