×

தெப்பல் உற்சவத்தின் 3ம் நாளில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் மலையப்பசாமி காட்சி

திருமலை : தெப்பல் உற்சவத்தின் 3-ம் நாளில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் மலையப்பசாமி 5 சுற்றுகள் வலம் வந்து அருள்பாலித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் கடந்த 13-ம்  தேதி தொடங்கியது. இதையடுத்து முதல் நாள் சீதா-லட்சுமணர் சமேத கோதண்டராம சுவாமியும், இரண்டாவது நாளான நேற்று முன்தினம் ருக்மணி சமேத கிருஷ்ணரும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தெப்பல் உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று தேவி-பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஐந்து சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி, கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகளும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தெப்பல் உற்சவத்தையொட்டி மெய்நிகர் சேவையில் நடைபெற்று வந்த ஆர்ஜித பிரம்மோற்சவம்,  சகஸ்கர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது.


Tags : Malayappasamy ,Sridevi ,Bhudevi ,Teppal festival , Thirumalai: On the 3rd day of the Teppal festival, Malayappasamy came with Sridevi-Bhudevi for 5 rounds and blessed her. At the Tirupati Ezhumalayan Temple
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த...