டெல்லி: லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்திரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. லக்கிம்பூர் சம்பவத்தில் ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஷ்ராவுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு எதிரான மனு விசாரணைக்கு வந்தது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.