×

முத்துப்பேட்டை அருகே குரங்குக்கு வைத்த கூண்டில் மரநாய் சிக்கியது

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் குடிசேத்தி கிராமத்தில் திருத்துறைப்பூண்டி முன்னாள் திமுக எம்எல்ஏ ஆடலரசன் வீடு உள்ளது. சமீபகாலமாக இப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள், பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததுடன் வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்கள் எடுத்துச்சென்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு
ஆடலரசன் வீட்டிற்குள், ஒரு குரங்கு புகுந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து ஆடலரசன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் அங்கு சென்ற திருச்சி மண்டல தலைமை வனபாதுக்காவலர் சதீஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் அறிவொளி தலைமையிலான வனத்துறையினர் ஆடலரசன் வீட்டு வளாகத்தில் குரங்கை பிடிக்க ஒரு கூண்டு வைத்து விட்டு சென்றனர். இந்தநிலையில் நேற்று மாலை அந்த கூண்டில் ஒரு மரநாய் சிக்கி இருந்தது. இதையடுத்து ஆடலரசன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு சென்ற வனத்துறையினர் மரநாயை கூண்டோடு எடுத்து சென்று, அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில்  விட்டனர்.


Tags : Muthupet , The dog was trapped in a monkey cage near Muthupet
× RELATED முத்துப்பேட்டை அருகே...