×

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: விதிமுறையில் மாற்றம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

மும்பை: இந்த ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டி தொடர் விதிமுறையில் மாற்றம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 26-ம் தேதி தொடங்க உள்ளது. மார்ச் 26-ல் தொடங்கும் இந்த போட்டி மே மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்ந சிசனில் 10 அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. வீரர்களை அணியின் அதிகாரிகள் போட்டியிட்டு ஏலத்தில் எடுத்தனர். 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் சில பெரிய மாற்றங்களை கிரிக்கெட் வாரியம் செய்யதுள்ளது.

மாற்றம் செய்யப்பட்ட விதிமுறை:

* நடுவர் முடிவை மறு பரிசீலனை செய்யும் (டி.ஆர்.எஸ்.) வாய்ப்பு ஒவ்வொரு இன்னிங்சிலும் ஒன்றில் இருந்து 2-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* கொரோனா காரணமாக ஒரு அணி களம் இறங்க முடியாவிட்டால் அந்த ஆட்டம் மறு தேதியில் வைக்க முயற்சிக்கப்படும். அதுவும் முடியாவிட்டால் ஐ.பி.எல். தொழில்நுட்ப குழுவுக்கு முடிவெடுக்க அனுப்பி வைக்கப்படும். இதில் தொழில்நுட்ப குழுவின் முடிவே இறுதியானது
* இதற்கு முன்பு தள்ளி வைக்கப்பட்ட போட்டி மறு தேதியிலும் நடத்த முடியவில்லை என்றால் களம் இறங்காத அணி தோற்றதாக கருதப்பட்டு எதிரணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்பட்டன.  இந்த விதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.
*ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகும்போது மறுமுனையில் இருக்கும் பேட்ஸ்மேன் எதிர் பகுதிக்கு சென்று இருந்தாலும், செல்லாமல் இருந்தாலும் புதியதாக களம் இறங்கும் பேட்ஸ்மேன்தான் பந்தை சந்திக்க வேண்டும்.
* பிளேஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டியில் ஆட்டம் டையில் முடிந்து, சூப்பர் ஓவர் நடத்த முடியவில்லை என்றால் லீக் புள்ளி பட்டியலில் முன்னணியில் உள்ள அணி வெற்றியாளராக அறிவிக்கப்படுவர்.

10 அணிகள்:

1. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)
2. டெல்லி கேப்பிடல்ஸ் (DC)
3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKH)
4. மும்பை இந்தியன்ஸ் (MI)
5. பஞ்சாப் கிங்ஸ் (PK)
6. ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)
7. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB)
8. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
9. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)
10. குஜராத் டைட்டன்ஸ் (GT)

Tags : 15th IPL Cricket Match ,Indian Cricket Board , 15th, IPL. Cricket match, as a rule, change
× RELATED மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஐபிஎல்...