டெல்லி: தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று திமுக எம்.பி.வில்சன் கேட்டுக் கொண்டுள்ளார். மக்களவையில் பேசிய அவர், ஜி.எஸ்.டி. உள்பட 38 பிரிவுகளில் உள்ள ரூ.20,287 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை மட்டும் ரூ.9,842 கோடி வழங்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.