×

கள்ளக்காதல் எதிரொலியாக ரவுடி சரமாரி வெட்டிக்கொலை: 3 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி(27).  இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் மீது ராஜமங்கலம், கொளத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன.

நேற்று இரவு 7 மணி அளவில் கொளத்தூர் மக்காரம் தோட்டம் வழியாக ராஜமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்று கொண்டிருந்தபோது மூன்று கொண்ட கும்பல் பழனியை, கத்தியுடன் அப்பகுதியில் உள்ள மோகன்  என்பவரது வீட்டுக்குள் நுழைய முயன்றார்.  அப்போது கூலிப்படையினர் மூன்று பேரும் சரமாரியாக பழனியை  வெட்டியுள்ளனர்.  இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ராஜமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பழனியின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆதி என்கின்ற ஆதிகேசவன், விக்னேஷ், சரண்ராஜ்  உள்ளிட்ட சிலர்  பழனியுடன் ஒரே வழக்கில் சிறையில் இருந்ததாகவும் பழனி தனது கூட்டாளி மனைவி ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததால் அவரை பல முறை எச்சரித்தும் அவர் கள்ளத் தொடர்பை துண்டிக்காத காரணத்தினால்  அவரை கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
கொலைக்கு இதுதான் காரணமா அல்லது ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமா என்ற பல கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  தொடர்ந்து ராஜமங்கலம் போலீசார் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Tags : Rowdy , Rowdy volley murder in echo of fake love: Police web for 3 gang
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...