சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கில் ஜெ.தீபா, ஜெ.தீபக்கை சென்னை உயர்நீதிமன்றம் சேர்த்தது. வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை கோரிக்கையை ஏற்று இருவரும் சேர்க்கப்பட்டனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை இருவருக்கும் வழங்க வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.