×

சென்னை தரமணியில் டிஎல்எப் ஸ்டான்டர்டு சார்ட்டர்டு அலுவலக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை தரமணியில் டிஎல்எப்  ஸ்டான்டர்டு சார்ட்டர்டு அலுவலக வளாகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 27 ஏக்கரில் கட்டப்படும் வளாகத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி முதலீடு செய்ய டிஎல்எப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2025க்குள் ஐடி நிறுவனங்கள் பெருமளவு முதலீடு செய்யவும், 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு, பொன்முடி மற்றும் டிஎல்எப் அதிகாரிகள் பங்கேற்றனர்.

எதிர்கட்சியோ, ஆளுங்கட்சியோ மக்களுக்காக பணி ஆற்றி வருகிறோம் என அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு மக்கள் திமுக மீது வைத்த நம்பிக்கையை காட்டுகிறது என சூட்டிக்காட்டினார். கொரோனா காலத்தில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் மக்களுக்கு திமுக உதவியது என பேசினார்.  கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் என கூறினார். பொய் பிரச்சாரங்களை முறியடித்து திமுக மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.


Tags : Chief Minister ,MK Stalin ,DLF Standard Chartered ,Chennai , Grade, DLF, to office premises, foundation, MK Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...