சென்னை: பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தேசிய குடற்புழு நீக்க வாரம், 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த முகாமில் 1 முதல் 19 வயது சிறார்கள், கருவுறாத மற்றும் பாலூட்டாத 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இதற்காக 2.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி, சுகாதார, ஆஷா உள்ளிட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.