×

பேருந்தில் தப்பி சென்ற கொலை வழக்கு குற்றவாளியை மடக்கி பிடித்த திண்டிவனம் போலீசார்-வேப்பூர் போலீசிடம் ஒப்படைத்தனர்

திண்டிவனம் : கடலூரை சேர்ந்த கொலை வழக்கு குற்றவாளி பேருந்தில் சென்னைக்கு தப்பி செல்லும்போது, திண்டிவனம் போலீசார் மடக்கி பிடித்து வேப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பூலாம்பாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேலு மகன் அண்ணாதுரை(52). இவர் கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் கடலூரில் இருந்து அரசுப் பேருந்து மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு தப்பி செல்ல முயன்றார். இதுகுறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் காந்தி மற்றும் போலீசார் திண்டிவனம் புறவழிச்சாலை அருகே அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது குற்றவாளி பேருந்தில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அவரை வேப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Ddivanam police ,Veppur police , Tindivanam: Tindivanam police nab Cuddalore murder accused fleeing to Chennai in a bus
× RELATED கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு...