×

பஞ்சாப் எல்லையில் பெரும் ஆயுத குவியல்

பெரோஸ்பூர்: பஞ்சாபின் சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அபோஹர் செக்டாரில் புற காவல்நிலையம் அருகே ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை மாநில சிறப்பு பிரிவு போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுக்கி  வைக்கப்பட்டு இருந்த ஏராளமான ஆயுதங்களும், அதிகளவிலான வெடிப்பொருட்களும்  கண்டறியப்பட்டன. இவற்றை வீரர்கள் பறிமுதல் செய்தனர். பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஏகே- 47 ரக துப்பாக்கி, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 3 ரைபிள்கள், சீனாவில் தயாரிக்கப்பட்ட 5 பிஸ்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Punjab border , Huge pile of weapons on the Punjab border
× RELATED மோடி மீண்டும் வரக்கூடாது;...