×

தமிழகம், கேரளாவை சேர்ந்த மேலும் 25 மீனவர்கள் செஷல்ஸ் தீவில் சிறைபிடிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் வெளிநாடுகளில் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். கொச்சியில் இருந்து படகில் சென்று செஷல்ஸ் தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்ட மீனவர்கள் 20 பேர், கேரளாவை சேர்ந்த 13 பேர் என 33 பேரை செஷல்ஸ் தீவு பாதுகாப்பு அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு செஷல்ஸ் தீவில் மேலும் 25 தமிழக மற்றும் கேரளாவை சேர்ந்த மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் செஷல்ஸ் தீவில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. பலமுறை எச்சரித்தும் செஷல்ஸ் தீவு பகுதிக்கு மீனவர்கள் அத்துமீறி வந்ததாக அங்குள்ள அரசு குற்றம் சாட்டி உள்ளது.

Tags : Tamil Nadu ,Kerala ,Seychelles , Another 25 fishermen from Tamil Nadu and Kerala were captured on the Seychelles
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...