×

மாவட்டங்களில் உள்ள மணிமண்டபங்கள், சிலைகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்: அமைச்சர் சாமிநாதன் உத்தரவு

சென்னை:  திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 12 மாவட்டங்களின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி குறித்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று சென்னையில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன்  காசிராஜன் முன்னிலை வகித்தார். செய்தி மக்கள் தொடர்பு துறை  இயக்குநர் ஜெயசீலன் வரவேற்றார். கூட்டத்தில் கூடுதல் இயக்குநர்கள் அம்பலவாணன், பாண்டியன் உட்பட பலர் கலந்து  கொண்டனர். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: மாவட்டங்களில் உள்ள மணிமண்டபங்கள், சிலைகள் நல்ல முறையில் பராமரித்திட வேண்டும். நினைவகங்கள் குறித்து  சாலைகளில் முன்கூட்டியே பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகைகள் அமைக்க வேண்டும்.


Tags : Minister ,Saminathan , The mandapams and idols in the districts should be well maintained: Minister Saminathan orders
× RELATED மாநகராட்சி எல்லைகள்...