பெங்களூரு: உடல்நிலை பாதிப்பு காரணமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக தன்னுடைய இடது கையில் சற்று பிரச்சினைகள் இருப்பதாக அவர் கூறியதை தொடர்ந்து இன்று ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே கட்சியினர், மாநில மக்கள் ஆகியோர் கவலைப்பட தேவையில்லை என்று அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது அலுவல் ரீதியான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சந்திரசேகர் ராவுக்கு துணையாக அவரது மனைவி மற்றும் மகள் மருத்துவமனையில் உள்ளனர்.