×

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கை ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வேளச்சேரியில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை குறித்து பேசியதாகவும், அப்பேச்சு முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாகவும் இருந்தது என்று கூறி அதிமுக அரசு சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு ஆர்.எஸ். பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு எம்.பி - எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்  நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் தனி நபர் குறித்து பேசியதற்கு அரசு, அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.    


Tags : Dimuka Organisation ,R. S. ,Bharati ,Chennai , DMK, RS Bharathi, Defamation case, quashed, iCourt
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...