×

குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

குன்னூர்,: குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் காலநிலைக்கு ஏற்ப காடுகளில் பழங்கள் காய்த்துள்ளன. அவற்றில் முக்கியமான நாவல் பழம், பலா உள்ளிட்ட பழங்கள் அதிகளவில் காய்த்துள்ளது. அவற்றை உண்ண கரடி, யானை உள்ளிட்டவை அதிகளவில் வருகின்றன.

இந்நிலையில், குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகளவில் பலாப்பழ மரங்கள் உள்ளன. பலாப்பழங்களை உண்பதற்காக குட்டியுடன் கூடிய ஆறு யானைகள் கூட்டமாக கே.என்.ஆர். மற்றும் புதுக்காடு போன்ற பகுதியில் முகாமிட்டுள்ளன.
யானைகள் அவ்வப்போது சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், யானைகளை புகைப்படம் எடுக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : Coonoor ,Mettupalayam , Coonoor- Mettupalayam Wild elephants roaming the hills: Warning to motorists
× RELATED நீலகிரி அதிமுக அலுவலகம், வேட்பாளர் காரில் சோதனை