×

தக்கலை அருகே குளத்தில் மூழ்கி 3 வயது குழந்தை பலி

குமாரபுரம்: குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ. கிரானைட் ஆலை வைத்துள்ளார்.  இவரது ஆலையில் நேபாளத்தை சேர்ந்த லாலுசிங் என்பவர் குடும்பத்தினருடன் தங்கி பணியாற்றி வந்துள்ளார். இவரது மகன் ரமேசின் 3 வயது மகன் ரோஷனும் லாலுசிங்குடன் வசித்து வந்தான். நேற்று மாலை கிரானைட் ஆலை வளாக வீட்டின் பின்புறம் அமைந்துள்ள தோட்டத்து அருகில் உள்ள குளத்தின் கரையில் ரோஷன் விளையாடிக் கொண்டிருந்தான்.
 அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை ரோஷன் குளத்தில் தவறி விழுந்தான். அந்த பகுதியில் நின்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சிலர் குளத்துக்குள் இறங்கி குழந்ைதயை தேடினர். பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்்டது. இதையடுத்து தக்கலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் தேடினர். சுமார் அரை மணி நேர தேடுதலுக்கு பின் குழந்தை ரோஷன் சடலமாக மீட்கப்பட்டான். குழந்தையின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி,  குழந்தை ரோஷனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Takkala , Thakkala, in pool, kills 3-year-old, child
× RELATED தக்கலை அருகே சகோதரர் மனைவியை தாக்கியவர் கைது