×

பல்லடம் அருகே இருசக்கர வாகனங்கள் மீது சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து: 3 வயது குழந்தை உள்பட 4 பேர் பலி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருசக்கர வாகனங்கள் மீது சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதியது. இதில் 3 வயது குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோவையில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் புத்தரச்சல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கோவையில் இருந்து மணப்பாறைக்கு குமரேசன், அவரது மனைவி ஆகியோர் ஒரு வாகனத்திலும் முருகன், தனது மனைவி மற்றும் 3 வயது குழந்தையுடன் மற்றொரு வாகனத்திலும் சென்றனர்.

அதிகாலையில் புத்தரச்சல் என்ற இடத்தை கடந்த போது காய்கறிகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் அந்த 5 பேரில் 3 வயது குழந்தை உள்பட 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆனந்தியை மீட்டு 108 அம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கு காரணமான சரக்கு ஆட்டோ ஓட்டுநர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக காமநாயக்கன் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.


Tags : Palladam , Palladam, two-wheelers, freight auto, accident
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு