×

யூடியூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர் : ஐகோர்ட் அதிரடி கருத்து!!

மதுரை : யூடியூபை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழிமுறைகளை தேவை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழக முதல்வா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துக்களையும், விடியோக்களையும் யூடியூபா் சாட்டை துரைமுருகன் வெளியிட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் அவரை கைது செய்தனா். இந்த வழக்கில் அவருக்கு உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. இதனிடையே, மீண்டும் தமிழக முதல்வா் குறித்து யூடியூபா் துரைமுருகன் அவதூறாக விடியோ பதிவிட்டதாக அவா் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து நிபந்தனையை மீறி செயல்பட்டதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை ரத்து செய்யுமாறு காவல் துறை தரப்பில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி, இந்தியாவில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கி உள்ளதாக தற்போது செய்தி வெளியாகி உள்ளது. யூடியூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர். யூடியூப்பை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழிமுறைகள் தேவை. நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமனம் செய்த வழக்கறிஞர் ராம கிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கு மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : YouTube, iCourt, Action, Comment
× RELATED மக்களவை தேர்தலில் பிற்பகல் 3 மணி...