×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: ஆலையின் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேல ஒட்டம்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை மேலாளர் கணேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். நேற்று மாலை 5 மணியளவில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் மற்றொருவர் காயம் அடைந்தார். சிவகாசியை சேர்ந்தவர் பரமன் இவருக்கு சொந்தமான நாக்பூர் லைசன்ஸ் கொண்ட விநாயகா பட்டாசு தொழிற்சாலை சாத்தூர்மேல ஒட்டம்பட்டி கிராமத்தில் உள்ளது.

40க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது . இன்று மாலை 5 மணியளவில் டபுள் ஷாட் பட்டாசு வெடி மருந்து செலுத்திய போது மருந்து கலவை அறையில் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. சாத்துார் அமீர்பாளையத்தை சேர்ந்த கணேசன் 20 வயது இவர் சம்பவ இடத்தில் உடல் சிதறி பலியானார் இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார்  நேற்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நியைில் வெடி விபத்து காரணமாக பட்டாசு உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டனர்.


Tags : Chattur , Sattur, blast, 3 persons, case registered
× RELATED சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10...