கடலூர்: நெல்லிக்குப்பம் நகர்மன்ற துணைத் தலைவர் பதவியை ஜெயபிரபா ராஜினாமா செய்தார். வி.சி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுகவைச் சேர்ந்த ஜெயபிரபா போட்டி வேட்பாளராக நின்று வெற்றி பெற்றிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஜெயபிரபா நகர்மன்ற துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.