சென்னை: டாப்ஸி நடிக்க வேண்டிய படத்தை நயன்தாரா கைப்பற்றியுள்ளார். என்றென்றும் புன்னகை, மனிதன், வாமனன் படங்களை இயக்கியவர் அஹமது. இவர் ஜெயம் ரவி நடிப்பில் ஜனகண மன என்ற படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். இதில் ஹீரோயினாக நடிக்க டாப்ஸி தேர்வாகி இருந்தார். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்தது போல் தொடங்கவில்லை. கொரோனாவாலும் மேலும் சில காரணங்களாலும் படப்பிடிப்பு தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. இந்நிலையில் இப்போது இந்த படத்தினை துவங்க அஹமது முடிவு செய்திருக்கிறார். ஜெயம் ரவி கால்ஷீட் கொடுத்துவிட்டார். அதே சமயம், டாப்ஸிக்கு பதிலாக நயன்தாரா இதில் நடிப்பார் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்திலிருந்து திடீரெ தன்னை நீக்கியதால் டாப்ஸி அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.