சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கியிருப்பதோடு அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டியுள்ளது. கர்நாடக அரசின் இந்த சட்டவிரோத போக்குக்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரும் ஆதரவு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் கர்நாடக அரசு மதிக்காததில் வியப்பேதும் இல்லை.
தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பதில் முனைப்பாக இருக்கும் திமுக தலைமையிலான இந்த அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம். காவிரிப் பிரச்னையில் தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இங்கு அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.