புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஒன்றிய அரசிடம் எந்த திட்டமும் இல்லை: ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லாத திண்டாட்டம் மற்றும் பணவீக்கம், உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்கள் மற்றும் நமது பிராந்தியத்தை சீன ஆக்கிரமித்துள்ளது. இந்த விவகாரங்களை தீர்ப்பது தொடர்பாக அரசிடம் எந்த திட்டமும் இல்லை. மோடி அரசு விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.