×

அரசு கிளைகளில் ஏராளமான ஊழல் முறைகேடுகள் உள்ளன: உயர்நீதிமன்ற கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சாடல்

மதுரை: அரசு கிளைகளில் ஏராளமான ஊழல் முறைகேடுகள் உள்ளன என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார். அரசு ஊழியர்கள் மீது ஏராளமான குற்றசாட்டுகளை மக்கள் முன்வைக்கின்றனர். சில குற்றச்சாட்டுகள் உள்நோக்கத்துடன் இருந்தாலும் சில புகார்களுக்கு விசாரணை அவசியமாகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் கடமையை செய்வதில்லை என புகார் தெரிவிக்கின்றனர் என்று நீதிபதி தெரிவித்தார். நாகர்கோவிலை சேர்ந்த செவிலியர் பெமிலா தனது இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். 


Tags : Judge ,SM Subramaniam Sadal , Government Branch, Corruption, High Court Branch Judge SM Subramaniam
× RELATED பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு...