சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று அப்பல்லோ மருத்துவர்கள் 4 பேர் உள்பட 5 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்றைய விசாரணை நிறைவுபெற்றது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்பு உடல்நிலை எப்படி இருந்தது என விளக்கம் அளித்தனர். மருத்துவர்கள் பாபு மனோகர், அருள் செல்வம் ஆகியோர் விரிவாக விளக்கம் அளித்தனர் என்று குறிப்பிட்டார்.