×

சிவசங்கர் பாபா உச்ச நீதிமன்றத்தில் மனு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிவசங்கர் பாபாவை புழல் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சிவசங்கர் பாபா தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட இரண்டு ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவையும் நீதிபதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதேபோல், மேலும் ஓரு வழக்கில் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் கோரிய மனுவும் தள்ளுபடியானது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் சிவசங்கர் பாபா மேல்முறையீடு தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வில், வரும் 8ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Tags : Sivashankar Baba ,Supreme Court , Sivashankar Baba Petition in the Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...