×

சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை குற்றங்களை குறைக்கும் கடும் நடவடிக்கையாக அமைய வேண்டும் என நாடு எதிர்பார்க்கிறது. இந்த வழக்கில் தொடர்புள்ள ஒருவர் தப்பித்து, தலைமறைவாகி விட்டதாக கூறியிருப்பது காவல்துறையின் பணி மீதான விமர்சனமாகும். அவரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த வழக்கு சாதிவெறி ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை திரும்ப, திருப்ப வலியுறுத்துகிறது. இதனைக் கருத்தில் கொண்டு வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் சாதிவெறி ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்.

Tags : Prevention of Arson Act in the Assembly Session: Mutharasan Insistence
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...