×

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 174 ரன்களுக்கு ஆல்-அவுட்: ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட் அசத்தல்

மொஹாலி: இந்தியாவுக்கு எதிராக மொஹாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து பாலோ ஆன் ஆனது. இலங்கைஅணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ரவீந்திர ஜடேஜா, 7 முதல் 11 வரை களமிறங்கிய பேட்ஸ்மேன் வரிசையில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி நேற்று இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. இன்று காலை ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில் இந்திய அணியின் அசத்தலான பந்துவீச்சால் இலங்கை அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து பாலோ ஆன் ஆனது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

Tags : Sri Lanka ,India ,Ravindra Jadeja , Sri Lanka all out for 174 in the first innings of the first Test against India: Ravindra Jadeja 5 wickets
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...