பெங்களூரு: கர்நாடகாவில் கல்குவாரியில் பாறைகள் உருண்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவிலுள்ள சாம்ராஜ் மாவட்டத்தில் கல்குவாரி பணிகள் நடைபெற்று வருகிறது. கேரளாவை சேர்ந்த ஹகீம் என்பவர் அரசின் அனுமதி பெற்று குத்தகையின் அடிப்படையில் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த கல்குவாரியில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கேரளாவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலார்கள் வேலை செய்து வருகின்றனர்.
கல்குவாரியில் பாறைகள் வெடி வைத்து கற்களாக மாற்றி பொக்லைன் எந்திரங்களின் மூலம் லாரிகளில் ஏற்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றும் கல்குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படும் பணி நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை கல்குவாரியில் வெடி வைக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட வேட்டியின் அதிர்வால் குன்றின் மேலிருந்த பெரிய பாறை எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது.
இதனால் கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பாறையின் அடியில் சிக்கி 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு மேலும் பாறை அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் பாறையின் அடியில் சிக்கி உயிரிழந்த நிலையில் 5 பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோர் இரண்டாவது நாளாக இன்றும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.