×

சசிகலாவை நேரில் சந்தித்து பேசிய ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்!: ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ் அதிரடி

சென்னை: அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட ஆவின் தலைவரான ஓ.ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கி ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ் உத்தரவிட்டுள்ளனர். வி.கே.சசிகலாவை நேரில் சந்தித்து பேசிய நிலையில் ஓ.ராஜா கட்சியில் இருந்து நீடிக்கப்பட்டார். சசிகலாவை திருச்செந்தூரில், ஓ.ராஜா நேற்று மாலை சந்தித்து பேசி இருந்தார்.

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்டம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு. ஓ. ராஜா ( தேனி மாவட்ட ஆவின் தலைவர் ), திரு. ளு. முருகேசன்( தேனி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் ), திரு. வைகை. கருப்புஜி ( தேனி மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் ), திரு. ளு. சேதுபதி ( கூடலூர் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் ), ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Tags : O.R. ,Sasigala ,King Pronamuka , Sasikala, O. Raja, AIADMK, O.P.S.- E.P.S.
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; கோவை...