சென்னை: மறைமுக தேர்தலில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிகவுக்கு எதிராக போட்டியிட்டு வென்ற திமுகவினரை ராஜினாமா செய்ய சொன்ன முதல்வர் அறிக்கையே போதும் என திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.