×

வந்தவாசி அருகே சுவரில் துளையிட்டு அடகு கடையில் 65 சவரன் 3 கிலோ வெள்ளி கொள்ளை

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (50).  இவர் தெள்ளார் வணிக வளாகத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 10 மணியளவில் கடையை திறப்பதற்காக வந்தபோது கடை  முகப்பில் இருந்த 2 கேமராக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.  பூட்டு எதுவும் உடைக்காமல் இருந்ததால் கடையை திறந்த சரவணன் சுவரில் துளையிடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பாதுகாப்பு பெட்டக இரும்பு பீரோவை உடைத்து 65 சவரன் நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.3 லட்சம் கொள்ளை போயிருந்தது. புகாரின்படி தெள்ளார் போலீசார் வந்து விசாரித்தனர்.

அருகில் உள்ள பைக் மெக்கானிக் கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் பக்கவாட்டு சுவரை துளையிட்டு அடகு கடையின் புகுந்து லாக்கரை உடைத்து கொள்ளை அடித்தது தெரியவந்தது.  வெளியே இருந்த கேமரா,  உள்ளே இருந்த கேமராவை உடைத்துள்ளதால் பெட்ரோல் பங்க் மற்றும் தெள்ளார் காவல் நிலைகண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

வெளி மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என கருதுவதால் போலீசார் அனைத்து வாகன சோதனை மையங்களில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Vandavasi , Arrival, pawn shop, robbery
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...