×

சார்பு ஆய்வாளர் பணிக்கு மார்ச் 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்

சென்னை: சார்பு ஆய்வாளர் பணிக்கு மார்ச் 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 444 சார்பு ஆய்வாளர் பணிகளுக்கு மார்ச் 8 முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது. விண்ணப்பதாரர்கள் http://tnusrb.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். நேரடி தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் 8ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. தமிழ் தகுதித் தேர்வு தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்களின்படி நடைபெறும் என கூறியுள்ளது.

Tags : Tamil Nadu Uniform Employee Examination Board , Pro-Analyst job, March 8th, can apply
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...