சென்னை: தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் தூர முன்னறிவிப்பு குறியீடு 1 ஏற்றப்பட்டுள்ளது.