×

திருநள்ளாறு பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

காரைக்கால் : திருநள்ளாறில் நளநாராயண பெருமாள் கோயிலில் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து நடந்த தீர்த்தவாரி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் திருத்தலம் அமைந்துள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாகத்தின்கீழ் செயல்படும் நளநாராயண பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரில் உற்சவர் நள்நாராயண பெருமாள் எழுந்தருளினார்.

பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நளன் குளத்தை அடைந்தார். உற்சவருக்கு சந்தனம், பால் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு நளதீர்த்தத்தில் புனித நீராடினர். பின்னர் நாராயண பெருமாளுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது.

Tags : Tirthwari ,Thirunallar Perumal Temple , Karaikal: A procession was held at the Nalanarayana Perumal temple in Thirunallar. Plenty of Tirthwari festival followed
× RELATED தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக...