×

பணி ஓய்வுபெற்ற தீயணைப்புத்துறை டிஜிபி கரன் சின்காவுக்கு நினைவுப்பரிசு: சைலேந்திரபாபு வழங்கினார்

சென்னை: உத்தராஞ்சல் மாநிலத்தை சேர்ந்தவர் கரன் சின்கா. இவர், தமிழக கேடரில் 1987ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய இவர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றினார். சிபிசிஐடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். டிஜிபியாக பதவி உயர்வு பெற்று தற்போது தீயணைப்பு மற்றும் மீட்புப் படை இயக்குநராக பதிவு வகித்து வந்தார். இவரது பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, தமிழக காவல்துறை சார்பில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை இயக்குநரான டிஜிபி கரன் சிங்காவுக்கு பிரிவு உபசார விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று காலை நடந்தது.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த டிஜிபி கரன் சின்காவுக்கு தமிழக காவல்துறை சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு, டிஜிபிக்கள் ஷகீல் அக்தர், கந்தசாமி, சுனில் குமார் சிங், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், தாம்பரம் கமிஷனர் ரவி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டு ஓய்வுபெற்ற கரன் சின்காவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, ஓய்வு பெற்ற டிஜிபி கரன் சின்காவுக்கு நினைவு பரிசு வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்தார்.

Tags : Fire Department ,DGP ,Karan Sinha ,Silenthrababu , Commemorative tribute to retired DGP Karan Sinha: Silent Babu
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு